மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற 2000 சொற்றொடர்கள் கொண்ட மென்பொருள் வழங்கப்படவுள்ளது-  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

திருவள்ளூரில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதுள்ள +2 வகுப்பிற்கான பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வு மட்டுமல்லாது அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும்.

2017 – 2018 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் மடிக்கணினி வழங்கப்படும். மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற 2000 சொற்றொடர்கள் கொண்ட மென்பொருள் வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.