பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி!! மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி!! மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கலால் வரி 200% அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி   கூறுகையில்,பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கலால் வரி 200% அதிகரித்துள்ளது.சாதகமான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கியிருந்தது இந்தியா.அதேபோல் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சுங்கவரி உயர்வு உடனடியாக அமல் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *