மின்சாரம் பாய்ந்து 20 பேர் பலி.!

மத்திய ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ குடியரசின் பிரஸ்விலி மாகாணத்தில் பல  பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அப்போது கின்டெலி பகுதியிலும் இடிமின்னலுடன் கூடிய  கனமழை பெய்தது.

இந்த கனமழையின்போது கின்டெலி பகுதியில் உள்ள இரண்டு உயர்மின் அழுத்த கம்பிகள் மீது மின்னல் தாக்கியது. மின்னல்கள் தாக்கியதால் பல உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன.

அறுந்து விழுந்த மின்கம்பிகள் தரையில் நின்றுகொண்டிருந்த பலர் மீது விழுந்தது.இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

author avatar
murugan