டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது-ஸ்டாலின்

டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று   தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது .டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக மருத்துவ அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.