2 கேரட் போதும் மீதம் வைக்காமல் குடிக்கும் சுவையான கேரட் லஸ்ஸி தயார்!

பொதுவாக மாலையில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் ஏதாவது இனிப்பான பொருட்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவது வழக்கம். ஆனால், என்ன செய்து கொடுப்பது என்று தான் தெரியவில்லை, அப்படி எதையாவது செய்து கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆனால், இப்போது இயற்கையான முறையில் இரண்டே இரண்டு கேரட் இருந்தால் போதும் குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிடக்கூடிய ஒரு அருமையான பானம் தயாராகிவிடும்.

தேவையான பொருட்கள்

  • கெட்டியான தயிர் ஒரு கப்
  • சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன்
  • கேரட் 2
  • பால் அரை கப்
  • ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்

செய்முறை

முதலில் கேரட்டின் மேற்புறத்தில் உள்ள தோலை நீக்கி விட்டு, கேரட்டை துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு அதை குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை அவிய விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் இருந்து எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் எடுத்து வைத்துள்ள பால் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இறுதியாக மீண்டும் ஏலக்காய் காணவில்லை என்றால் சற்று ஏலக்காய் பொடி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து டம்ளரில் ஊற்றி பரிமாறினால் சுவையான கேரட் லஸ்ஸி தயார். கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பார்கள்.

author avatar
Rebekal