சீன அதிபர் வருகை…! 18வகையான காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட நுழைவாயில்…!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்துள்ளார். சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் 18 வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு நுழைவாயில் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதுவே, அந்த நுழைவாயிலின் புகைப்படம்கள்….

 

author avatar
Vidhusan