தாயைப் போலவே தந்தைக்கு 164 நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.! பின்லாந்து அரசின் அதிரடி.!

பின்லாந்து பிரதமரான சன்னா மரின் தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு  கொள்ளகையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதில் குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராக 34 வயதான பெண் சன்னா மரின் என்பவர் பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு  கொள்ளகையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதில் குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. பின்னர் இந்த 164 நாட்கள் விடுமுறையில் தாயோ அல்லது தந்தையோ 69 நாட்கள் விடுப்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த திட்டத்தில் தந்தை, தாய் இருவரில் ஒருவர் மட்டும் இருக்கும்பட்சத்தில் அவருக்கு 328 நாட்கள் பேறுகால விடுமுறை வழங்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில், குழந்தை வளர்ப்பு இருவருக்குமே சமமான பொறுப்பு இருப்பதை உணர்த்தும் வகையில் இதுபோன்று திட்டத்தில் ஆண்களுக்கான விடுமுறை நாட்களை அதிகரித்துள்ளதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்று பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் என தெரிவித்திருந்தார் என குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்