15 லட்சத்து 36 ஆயிரம் இலவச லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் நடைமுறையில் இருந்துவருகிறது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்தாண்டு 15 லட்சத்து 36 ஆயிரம் இலவச லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இணையதள வசதி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.