பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி.!

  • பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன்.
  • பிரிட்டன் பொது தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன். இந்திய வம்சாவளியை சேர்ந்த வெற்றியாளர்கள், கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் 7 பேரும், லிபரெல் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். ஆனால், தொழிலாளர் கட்சி சார்பில், வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 1892-ல், பின்சுபரி மத்திய தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தாதாபாய் நவுரோஜி வெற்றி பெற்றார். அது முதல், இந்திய வம்சாவளியினர் பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால், இந்த முறை, இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், ககன் மொகிந்திரா, கிளாரி கவுடின்கோ, பிரிதி படேல், அலோக் சர்மா, ஷைலாஷ் வரா, சுலா பிரவர்மன், மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தொழிலாளர் கட்சி சார்பில் நவிந்து மிஸ்ரா, விரேந்திர சர்மா, தன்மன்ஜித் சிங், சீமா மல்கோத்ரா, ப்ரீத் கவுர் கில், லிசா நந்தி, வலரீ வஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். லெசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இந்த முறை, இந்திய வம்சாவளியினரின் பிரசாரம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியின் பூபென் தேவ் வெற்றி பெற்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்