தலைநகர் டெல்லியில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

தலைநகர் டெல்லியில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று 14 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,49,460 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 913 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,34,318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,167 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 10,975 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube