எல்லை கடந்து மீன்பிடித்த 13 தமிழக மீனவர்கள் கைது.!

  • நெடுந்தீவு பகுதியில் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் சென்று மீன்பிடித்ததாக  கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 
  •  13 மீனவர்களும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

ராமேஸ்வர கடற்கரை பகுதியில் இருந்து 38 கி.மீ. தொலைவில் நெடுந்தீவு உள்ளது. இந்த தீவு இலங்கை அரசு அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த தீவு பகுதியில் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் சென்று மீன்பிடித்ததாக  கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 13 கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

author avatar
murugan