117 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறும் பாகிஸ்தான்..!!

ஆசிய கோப்பையில்  இன்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இந்தியா , பாகிஸ்தான் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறி வருகிறார்கள் பாகிஸ்தான் அணியினர்.பாகிஸ்தான் அணியினர் 31 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 117 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

அதிகபட்சமாக பாபர் ஆஸம் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்துள்ளார்.இந்திய அணியில் புவனேஷ்குமார் ,கேதார் ஜாதவ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment