தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1,00,00,000 கோடி ஒதுக்கிய தினகரன்

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1,00,00,000  இன்று அளிக்கப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.