18 பேர் பாதையில் பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு …!இன்று விசாரணை …!

பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
Image result for பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11
 
செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
அதேபோல் தினகரன் அணி மேல்முறையீடு செய்யவில்லை,தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்றும் அறிவித்தது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
Image result for பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11
 
அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த  ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக  ஓட்டு போட்டனர்.

இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் சபாநாயகர் இதுகுறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் தகுதிநீக்கம் செய்வது சரியாக இருக்காது என்றும் தீர்ப்பளித்தது.
Related image
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி  மற்றும் தினகரன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை  ஒத்திவைக்க பன்னீர்செல்வம்  தரப்பு  கோரியதை  உச்சநீதிமன்றம் நிராகரித்தது.திமுக மற்றும்  டிடிவி தினகரன் தரப்பு மனுக்கள்  மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற உள்ளது.
 

Leave a Comment