பீகார் சாலைவிபத்தில் 11 பேர் பலி! 4 பேர் படுகாயம்!

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கண்ட்டி என்ற இடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், காரும், டிராக்டரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.