1,00,000 கன அடி நீர்தேக்க தொட்டி : திருவெறும்பூர் தொகுதியில்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டம் போடப்பட்டது. அந்த திட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை நேரில் அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இது சுமார் 1,00,000 கன அடி கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டி ஆகும். இந்த தொட்டி அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என அன்பில் பொய்யாமொழி டிவிட்டரில் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment