இன்றுடன் 1000 ரூபாய்கான டோக்கன் கொடுக்கும் பணிகள் நிறைவுபெரும்.!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு 1000 ரூபாய் நிவாரண தொகை அறிவித்து இருந்தது. 

அதனை வழங்கும் பணி அண்மையில் தொடர்ந்தது. மேலும், ரேஷன் கடைகளில் வரும் கூட்ட நெரிசலை தவிர்க்க பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண தொகை வாங்கிக்கொள்ளுமாறு பணித்தது. 

இதன்படி, ‘ நிவாரண தொகைவழங்கும் பணி இதுவரை 79.48 சதவீதம் பேர் முடிவடைத்துள்ளதாகவும், இன்றைக்குள் 1000 ரூபாய் நிவாரணத்தொகைக்கான டோக்கன் விடுபட்டோருக்கு கொடுக்கப்படும். நாளை முதல் நியாய விலை கடைகளில் நிவாரண பொருட்கள் கிடைக்கும்.’ என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.