மதுரையில் இன்று முதல் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.!

சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து  தற்போது மதுரை மாவட்டத்திலும் கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை  ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரையில் 5.39 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 ரூபாய் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று 27-ம் தேதி முதல் நிவாரண தொகையை வீடுகளில் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடந்து, இன்று முதல் மதுரையில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கயுள்ளது.

author avatar
murugan