100 நாள் வேலைத் திட்டம் 200 நாளாக மாற்றப்படும்-ஏ.சி.சண்முகம்

100 நாள் வேலைத் திட்டம் 200 நாளாக மாற்றப்படும்-ஏ.சி.சண்முகம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.எனவே  அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்

வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்  பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,100 நாள் வேலைத் திட்டம் 200 நாளாக மாற்றப்படும்.பேரணாம்பட்டு பகுதியில் 5 ஆயிரம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக தான் தேர்தல் தள்ளி போனது. இல்லையென்றால் அப்போதே நான் வெற்றி பெற்றிருப்பேன் என்றும் பேசினார்.

Join our channel google news Youtube