10% இடஒதுக்கீடு:எதிராக உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல்

10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிராக  திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும்  , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது.

பின் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வருகின்ற 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகத்திலும் அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு சுற்றரிக்கை அனுப்பியது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave a Comment