10 % இட ஒதுக்கீடுக்கு எதிராக அமளி…! 2 மணி வரை  மாநிலங்களவை ஒத்திவைப்பு …!

அமளியால் மதியம் 2 மணி வரை  மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவும் , எதிர்ப்பும் இருந்த சூழலில் இந்த மசோதா குறித்து அரசுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும் , 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டது.

இந்நிலையில் இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால்  மசோதாவிற்கு எதிராக திமுக எம்பிக்கள் முழக்கம் அமளியால் மதியம் 2 மணி வரை  மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment