மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகள் குடுபத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Kodungaiyur-victims

சென்னை ;  கொடுங்கையூரில் ஆர்.ஆர்.நகரில் இரண்டு சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது  அறுந்து கிடந்த மின்கம்பியின் மின்சாரம் தாக்கியதில் யூவஸ்ரீ மற்றும் பாவனா என்ற இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment