10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்ற வெற்றி வேட்பாளர்!!சுவாரஸ்யம்

  • 10 வாக்குகள் மட்டுமே பெற்று ராஜேஸ்வரி என்கின்ற பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கிய விவாகாரத்தில் தேர்தலை புறக்கணித்த மக்கள்,10 வாக்குகள் மட்டுமே பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார் ராஜேஸ்வரி

திருச்செந்தூர் ஒன்றியத்தில் உள்ளது பிச்சிவிளை ஊராட்சி இந்த ஊரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு அறிவிப்பின் படி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கபட்டது.ஆனால் இந்த ஒதுக்கீடு தொடர்பாக அக்கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை ஒரு தரப்பு மக்கள் புறக்கணித்து தங்களது ஜன்நாயக கடமையை ஆற்ற தவறினர்.ஆனால்  அறிவிப்பின் படி பிச்சிவினை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி என்ற பெண் வேட்பளாராக களமிறங்கினார்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இத்தேர்தலை புறக்கணித்தன் விளைவாக மொத்தம் 13 வாக்குகள் மட்டுமே பதிவாகியது அதில் ராஜேஸ்வரிக்கு 10 வாக்குகள் பதிவாகியது.இந்நிலையில் 10 வாக்குகள்  மட்டுமே பெற்ற ராஜேஸ்வரி  வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளார்.இதனால் அவர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவராக ஆகிறார்.

author avatar
kavitha