10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 3பேருக்கு தூக்கு தண்டனை ரத்து

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடுப்பத்திற்க்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது.

தேனி மாவட்டம்  காமாட்சிபுரத்தில் 2014 -ம் ஆண்டு 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது . மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் என மூன்று பேரை  கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது , 10 வயது சிறுமியை கூட்டு  பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

இந்நிலையில் சுந்தர்ராஜ் ,ரவி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்குத்தண்டனை என  உத்தரவை பிறப்பித்தது. மேலும் சிறுமியின் தாயிக்கு ரூ . 50,000 கருணை நிதி வழங்குவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சுந்தர்ராஜ் ,ரவி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேரின் மேல் முறையிடு வழக்கு காரணமாக தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது .

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடுப்பத்திற்க்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது.

மேலும்  ஒரு வழக்கில் அரசு தரப்பின் விசாரணை குறைபாடு காரணமாக குற்றவாளிகள் விடுதலையானால் அதற்கு விசாரணை அதிகாரி தான் பொறுப்பு. தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவு விட்டுள்ளது.

author avatar
murugan

Leave a Comment