மண்டபத்தை இடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலி.! ஐந்து பெண்கள் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த ஒரு பெண் பலி, ஐந்து பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்டபத்தை புதுப்பிப்பதற்காக இடித்த போது அருகிலுள்ள குடியிருப்பின் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த வீடுகளின் மீதும் சாய்ந்தால் 55 வயதான கன்னியம்மாள் என்பவர் இடிபாட்டில் மாட்டிக்கொண்டு உயிர் இழந்தார். மற்றும் மண்டபத்துக்கு அருகே இருந்த சில வீடுகளும் சேதமடைந்தன. இதில் ஞான நாகம்மாள், அங்கம்மாள், சண்முகத்தாய், ஈஸ்வரி,நிஷா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் நாகம்மாள் என்பவருக்கு இரு கால்களும் உடைந்து படுகாயம் அடைந்தாளால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தென்மண்டல டிஐஜி ஆனி விஜயா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் சரவண குமார், ஆட்சியர் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுச் செய்தனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பகொட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்