கொரோனா நிவாரணநிதிக்கு 1 கோடி, பிரதமர் நிவாரணநிதிக்கு 1 கோடி – ஓ.பி.எஸ் மகன் அசத்தல்!

கொரோனா வைரஸ் உலக முழுவதையும் ஆக்கிரமித்து மக்களை அழித்துக்கொண்டிருக்கும் நிலையில், பலரும் இதற்கான நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற பணத்தை கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உங்களால் இயன்றால் மத்திய அரசிடம் நிவாரண நிதிக்கான பணத்தை கொடுக்கலாம் என கேட்டுக்கொண்டார். இதனால், பல நடிகர்கள், தொழிலதிபர்கள் பணத்தை அள்ளி  இறைத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராகிய ஓபிஎஸ் அவர்களின் இளைய மகனாகிய ஜெயப்ரதீப் தற்பொழுது நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் பணத்தையும், பிரதமர் கேட்ட நிவாரண நிதிக்கான பணமாக 1 கோடியையும் கொடுத்துள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

author avatar
Rebekal