ஸ்டெர்லைட் விவகாரம்: முதலமைச்சர்க்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம்..!!

முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் அதில்  நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தூப்பாக்கி சூடு நடைபெற்றது.இந்த தூப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.அதில் உள்நோக்கத்தோடு சுடப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களில் பெரும்பாலோனர்க்கு பின்புறத்தில் இருந்து குண்டு பாய்ந்துள்ளது.மேலும் தலை மற்றும் மார்பு வழியாக குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என்ற அறிக்கை அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment