ஷீரடி சாய்பாபாவும் இந்திய வாக்காளர்…!! அஹ்மத்நகரில் வழக்கு…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஷீர்டி சாய்பாபாவின் பெயர் மற்றும் கோவில் முகவரி இடம் பெற்றிருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்காளர் ஆன்லைன் படிவங்களைப் பரிசீலித்தபோது ஷீர்டி சாய்பாபாவைவும் வாக்காளரக பெயர் பட்டியலில் இருப்பதாய் அதிகாரிகள் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சச்சின் மஸ்கா, நயப் தஹ்சில்திலார் (தேர்தல் கிளை) ரஹ்தா புதன்கிழமையன்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் போலியான தகவல்களை கொடுத்து வாக்காளர் பதிவு முறையில் விளையாடிய இவர்கள் மீது  ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ்  எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். “சாய்பாபாவின் பெயரை வாக்காளராக பதிவு செய்வதற்கு யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது…

வாக்காளர் பட்டியலில் ஷீர்டி சாய்பாபாவின் பெயர் மற்றும் முகவரி இடம் பெற்றுள்ளதால் சர்ச்சையாகவும் ,நகைப்பாகவும் இருந்தது…!

 
DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment