வைரமுத்து சர்ச்சை குறித்து நடிகர் விவேக் கருத்து…!!

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும்” என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆண்டாள் குறித்த கருத்தரங்ககில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாளை அவமதித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதையடுத்து, இந்து மதத்தை அவர் அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும்.தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி.ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிப்பேரரசு மன்னிப்புக் கேட்பதும், அந்த பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு” என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது விவேக் மீதும் பலர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment