வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு நிதியை..! ஏற்க மத்திய அரசு மறுப்பு..!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு நிதியை..! ஏற்க மத்திய அரசு மறுப்பு..!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து கேரளாவுக்கு நிதி வழங்குவதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதர் ட்வீட்டரில் பக்கத்தில் தாய்லாந்துக்கு இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகம் சார்பில் கேரள வெள்ளத்துக்கு 700 கோடிஅளித்தது .கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில முதல்வர் பினாராயி விஜயன் ஆனால் மத்திய அரசு 600 கோடி தொகை மட்டுமே அறிவித்தது இதனிடையே ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு 700 கோடி நிவாரண தொகையை அளித்துள்ளார் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
DINASUVADU