வீட்டில் இருந்தவாறு மூடி உதிர்விற்கு மருந்து தயாரிக்கலாம்..,

அவரவர் வீடுகளில் மூடி உதிர்வு பிரச்சனையை நீக்க இயற்கை முறையில் மருந்து தயாரிக்கலாம்
.
கடுமையான முடி உதிர்வு, ஆங்காங்கே சொட்டை, பொடுகுத் தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு, இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.Image result for செம்பருத்தி பூ
தேவையானவை: செம்பருத்தி பூ – 5 இதழ்கள், செம்பருத்தி இலை – 5, தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
செய்முறை: தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி, ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். நீர் விடக் கூடாது. நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய்யை அடுப்பில் சூடுபடுத்தி அதில், செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போடவும். 1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்கவும். நுரை அடங்கியதும் இறக்கி ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி இந்த எண்ணைய்யை பாட்டிலில் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதனை தினமும் உபயோக்கிக்கலாம். முடியின்  வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வாருங்கள். முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment