விழுப்புரம் அருகே குழந்தைகளிடம் அத்துமீறிய இளைஞருக்கு சரமாரி அடி, உதை…!!

குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து உதைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் அதே தெருவில் உள்ள ஓம் பிரகாஷ் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது 2 குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்த கொண்ட அந்த இளைஞர் இரண்டு குழந்தைகளையும் வீட்டின் பின் பக்கம் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவரை மடக்கி பிடித்துள்ளனர். தப்பிக்க முயன்ற அவரை கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்து 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்று காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இளவரசன் ஏற்கனவே பலாத்கார புகாரில் சிக்கி சிறையில் இருந்துள்ளதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment