விருதுநகர் சாத்தூர் அருகே வைப்பாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது…!!

விருதுநகர் சாத்தூர் அருகே வைப்பாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையபட்டி பகுதி வைப்பாற்றில் அனுமதியின்றி அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரி, 2 டிப்பர் மற்றும் ஜேசிபி வண்டிய பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட வேல்முருகன், அய்யனார், திருப்பதி ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment