விராட் கோலி பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வு..!

விராட் கோலி பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வு..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வரும் 12ம் தேதி பெங்களூருவில் வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் 2016-2017 மற்றும் 2017- 2018 ஆகிய இரண்டு சீசன்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக விராட் கோலிக்கு விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு சுமார் 30 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. பெண்கள் பிரிவில் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனாவுக்கு சிறந்த வீராங்கனைகளுக்கான விருது வழங்கப்பட உள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுவழங்கப்பட உள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *