விடாத பாசிச பாசம்..!!பாய்கிறதா..?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்..!தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் மீது..!!

விடாத பாசிச பாசம்..!!பாய்கிறதா..?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்..!தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் மீது..!!

ஆராய்ச்சி மாணவி சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய பட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.

Image result for SOPHIA BJP

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமானத்திற்கு சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணித்த சக பயணியான சோபியா என்ற இளம் பெண் தமிழிசையை நோக்கி, ‘பாசிச பாஜக ஒழிக’ என்று கோஷமிட்டார்.

Image result for SOPHIA BJP

இதனால் தமிழக பிஜேபி தலைவர் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் தமிழக பிஜேபி தலைவர் தமிழிசைபோலீஸில் புகார் அளித்தார்.இந்நிலையில் போலீஸார் சோபியாவை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் மறுநாளே மாவட்ட தூத்துக்குடி நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி சோபியாவை விடுதலை செய்தது

Related image

இந்நிலையில் மாணவி சோபியாவை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ஹென்றி திபேன்  பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது ”எழுத்தாளருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ அவை அனைத்தும் மாணவி சோபியாவுக்கும் உண்டு.

Image result for SOPHIA BJP

பிஜேபி தலைவர் தமிழிசை மீது அப்பொழுதே வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.மேலும் மிக மோசமான, தவறான வார்த்தைகளில் மாணவி சோபியாவை மிரட்டியதற்கும், உயிருக்கு ஆபத்தை உருவாக்குவோம் என்று சொன்னவர்களுக்கு கண்டிப்பாக எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் அப்படி செய்யவில்லை.இதனால் இனியும் இதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.இந்த வழக்கு பாயும் பட்சத்தில் ஜாமீனில் கூட வரமுடியாத சூழ்நிலை உருவாகும்.

DIMASUVADU

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *