வாங்கிய 10 மாதத்தில் வெடித்தது ஐபோன் எக்ஸ்!

ஆன்ட்ராய்டு போன் உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொட்டிருந்தாலும், தனக்கென தனி ஓஎஸ்-ஐ வைத்து கொண்டு  தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனம் அண்மையில் ரிலீஸ் செய்த ஐபோன் எக்ஸ் என்ற மாடல் வாங்கிய பத்து மாதத்தில் வெடித்தது என புகார் வந்துள்ளது.

அமெரிக்கா , வாஷிங்டனை சேர்ந்த ராகேல் முகமது என்பவர்  தான் ஐபோன் வாங்கி  பத்து மாதங்கள்தான் ஆகிறது என்றும், ஐபோன் அப்டேட் கொடுத்து கொண்டிருந்தேன் அப்போது சார்ஜர் கனெக்ட் ஆகி இருந்தது. பிறகு சிறுது நேரத்தில் அதிலிருந்து புகை வெளியே வந்ததது. உடனே சார்ஜரை ஆஃப் செய்துவிட்டு பார்த்தேன் போன் வெடித்துவிட்டது என புகார் தெரிவித்துள்ளார். இது குறிஇத்து அறிக்கை வெளியிட்ட ஆப்பிள் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் வெளியிடுகிறோம் என கூறினர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment