லால் பகதூர் சாஸ்துரி சிலைக்கு அவமரியாதை செலுத்திய ப்ரியங்கா காந்தி….!!!

  • லால் பகதூர் சாஸ்துரி சிலைக்கு அவமரியாதை செலுத்திய ப்ரியங்கா.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா, தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, உத்திர பிரதேசத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். இந்நிலையில், அங்குள்ள மக்களை படகு மூலம் சென்று சந்தித்து, அவர்களுடன் பேசியுள்ளார்.

இந்நிலையில், படகு பயணத்தின் ஒருபகுதியாக, ராம்நகரிலுள்ள சாஸ்திரி சவுக் பகுதியில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து, சாஸ்திரி சிலைக்கு அணிவித்து அவமரியாதை செய்தார்.

இந்நிலையில், பாஜகவினர் பிரியங்கா மாலை அணிவித்த சாஸ்திரி சிலை மீது, கங்கை நீரை ஊற்றி புனிதப்படுத்தி உள்ளனர். முன்னாள் பிரதமருக்கு அவமரியாதை செய்த பிரியங்காவுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment