ரூ 108,34,99,624….கஜா புயல் நிவாரண நிதி சேர்ந்துள்ளது…தமிழக அரசு அறிவிப்பு …!!

கஜா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 108 கோடியே 34 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்யவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து ஏராளமானோர் ஆர்வத்துடன் நிதி வழங்கி வருகின்றனர். நேரடியாகவும், ஆன் லைன் மூலமாகவும் இதுவரை 108 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 ரூபாய், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment