ரிலீசிற்கு தயாரான வெங்கட்பிரபுவின் 'பார்டி'!! சென்சார் ரெடி!!!

ரிலீசிற்கு தயாரான வெங்கட்பிரபுவின் 'பார்டி'!! சென்சார் ரெடி!!!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பெயர்பெற்றவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தனது கமர்சியல் படங்கள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் பார்டி.

இந்த திரைபடத்தில் சத்யராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணா, சிவா, நிவேதா பெத்துராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். 

இதன் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது. தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்று ரிலீசிர்க்கு தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சான்று அளிக்கபட்டுள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்க உள்ளது. 

 DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *