ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, வேனில் கொண்டுவரப்பட்ட ஆயிரம் மதுபாட்டில்களை துறைமுக போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. அதிலிருந்து, பல இடங்களில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவருவதாக புகார் உள்ளது. இதனை அடுத்து, துறைமுக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நிற்காமல் சென்ற ஒரு மினி வேனை போலீசார் மடக்கிய போது, வேன் டிரைவர் தப்பி ஓடியுள்ளார். அவர் ஓட்டி வந்த வேனை சோதனையிட்டதில், அட்டைப்பெட்டிகளில் 1000 மது பாட்டில்கள் இருந்துள்ளன. மது பாட்டில்களையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய வேன் டிரைவரைத் தேடிவருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *