ராஜமௌலி படம் என்றாலே தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் கவனிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
பாகுபலி-2 ரிலிஸாகி ஒரு வருடம் ஆகிவிட்டது, இன்னும் ராஜமௌலி அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லவில்லை.
தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருக்கின்றார், இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்நிலையில் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்றில் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கவுள்ளனர்.
இருவரும் அண்ணன், தம்பியாக நடிக்க, அண்ணன் போலிஸ், தம்பி கேங்ஸ்டர் இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் படம் என கூறியுள்ளது.