ரயில்வே காவல் பணிக்கு பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இல்லை!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி,பொன்.மாணிக்கவேல் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டதில், உள்நோக்கம் உள்ளது என  குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்க வேல் நீண்ட நாட்களாக ஒரே பதவியில் இருந்த காரணத்தால் தான் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டார் என விளக்கம் அளித்தார். இதுவரை களவுபோன சிலைகளை அதிமுக அரசு அதிகமாக மீட்டு வந்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment