ரஜினியின் ரசிகர்களுடான இன்றைய இன்றைய சந்திப்பின் நிகழ்வுகள்….!

இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னையின் பெருமிதம்:

அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்”  என பெருமையாக கூறினார்.

அரசியல் வருகை:

அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது ஆண்டவன் கையில் தான் உள்ளது” என சூசகமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.0 வெளியீடு அறிவிப்பு:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்க்ஷேயகுமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் இந்தியாவின் டேவிட் கமேரோன் என அழைக்க படும் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம்  தான்  எந்திரன் படத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பாகமான எந்திரன் 2.0 ஆகும்.இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் பலம்.இப்படமானது 2018 ஏப்ரல் 4ல் வெளியாகிறது 2.0 திரைப்படம் என இன்று ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் ரஜினி அறிவிப்பு செய்துள்ளார்.

ரசிகர்கள் குறித்து பெருமிதம்:

”நான் நோய்வாய்ப்பட்டபோது என்னை மீட்டுக் கொண்டு வந்தவர்கள் ரசிகர்களாகிய நீங்கள் தான். உங்களின் அளவில்லாத அன்புக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” – ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் ரஜினி பெருமிதமாக பேசியுள்ளார்.

இயக்குனர்கள் குறித்து பெருமிதம்:

தமிழ் மட்டும் கற்றுக்கொண்டால் உன்னை நான் உயரத்துக்கு கொண்டு செல்கிறேன் என பாலசந்தர் உறுதி அளித்தார். பிறகு, எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், வாசு ஆகிய இயக்குநர்கள்ம என்னை மெருகேற்றினார்கள்.அதேபோல் சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் ஆகியோர் என்னை சூப்பர் ஸ்டாராக ஆக்கினார்கள். ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இந்திய அளவிலான உயரத்துக்கு அழைத்துச் சென்றனர் என இயக்குனர்கள் குறித்து தனது பழம்பெரும் நினைவுகளை பெருமிதமாக பேசியுள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment