ம.பி முதல்வர் அதிரடி….முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி…!!

ம.பி முதல்வர் அதிரடி….முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி…!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிஸ் கட்சி மத்தியபிரதேசம் , சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.இந்நிலையில் மத்தியபிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் முதல்வராகி தன்னுடைய முதல் கையெழுத்துதாக அம்மாநில விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளார்.
ஏற்கனவே காங்கிஸ் கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில்  விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்த நிலையில் இன்று முதல்வராக தேர்வாகியுள்ள கமல்நாத் தன்னுடைய முதல் கையெழுத்தாக  விவசாயக்கடன் தள்ளுபடி கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.முதல்வரின் முதல் கையெழுத்தே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.இதனால் சுமார்  2,00,000 ரூபாய் வரை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *