“மொதல்ல ரோடு போடுங்க” அமைச்சரை கலாய்த்த தொண்டர்..!!

“மொதல்ல ரோடு போடுங்க” அமைச்சரை கலாய்த்த தொண்டர்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரை தொண்டர் ஒருவர் கலாய்த்தார். அது பற்றிய விவரம் வருமாறு

திண்டுக்கல் ஒன்றியப் பகுதி மாலைபட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலகிருshஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 1.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். காவிரி பிரச்சனை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசிக்கொண்டிருக்கையில் தொண்டர் ஒருவர் எழுந்து வந்து மேடையின் முன்பாக வந்து அதெல்லாம் செய்யுங்க அதோட மாலப்பட்டிக்கு ரோடும், விளக்கும் போடுங்க என்று கலாய்த்தால் அமைச்சர் சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையில் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *