மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத செம போதை பட நாயகன் காரணம் உள்ளே..!

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இவர் நடிப்பில் வெளியான பரதேசி படம் இவருக்கு ஒரு சிறந்த திருப்புமுனையாக அமைந்தது . இவர் நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது செம போதை ஆகாதே திரைப்படம் வெளியானது .இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக சென்ற அதர்வா விடம் அவரது அப்பா குறித்து கேட்டனர் .

அப்போது அவர் கூறியதாவது :-“எனது தந்தை இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் எனது அக்கா நிச்சயதார்த்தம் நடைபெற்றது . அப்போது அப்பா என்னிடம் சம்பத்தம் இல்லாமல் ஏதேதோ பேசினார் .பின்னர் நானக்கிருந்து செல்ல ஒரு மணி நேரத்தில் அப்பா மாரடைப்பில் இறந்துவிட்டார்.நான்  இருந்தால் ஏதாவது  காப்பாற்றி இருப்பேன் . அது எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது ” என கூறி அழுதார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment