மேகதாது விவகாரம் : புதுச்சேரி சட்டபேரவை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது…!!

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பியுள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசு அளித்த முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment