மூதாட்டியின் கை கால்களை கட்டி கடலில் தூக்கி வீசுவதை செல்போனில் படம் பிடித்த இளைஞர்கள்!

சமூகவலைதளங்களில் வைரலாகி  கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரையில் மூதாட்டி ஒருவர் கடலில் தூக்கிப் போடப்படும் கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் வடமாநில கும்பல் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவிவருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் அருகே மணக்குடி என்ற பகுதியில் மூதாட்டி ஒருவர் பசிக்கு உணவு கேட்டு வீடு வீடாக சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், கிராம இளைஞர்கள் குழந்தையை கடத்த மூதாட்டி வந்திருப்பதாகக் கூறி மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர், மனிதாபிமானமற்ற முறையில் மூதாட்டியின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கி வீச முயற்சித்தனர். அந்த காட்சியை தங்களது மொபைலில் படம் பிடிதத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டி அப்பாவி என தெரிந்ததால் அவர்கள் விடுவித்ததாக கூறப்படுகிறது. மூதாட்டியை கடலில் தீக்கி போடும் காட்சிகள் வெளியாகி  காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment