மும்பை டூ லண்டன் சென்ற விமானம் பாதியில் தரையிறக்க பட்டது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் அசெர்பைஜான் நகரில் உள்ள பாகு நகருக்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிறகு என்ஜினியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இங்கிலாந்தில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மும்பையில் இருந்து தாமதமாகவே புறப்பட்டு சென்றது.

இங்கிலாந்து நாட்டில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டனில் விமான போக்குவரத்து,ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment