முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம்…பிரதமர் மோடி புகழாரம்…!!

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
நேருவின் 129- வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- நமது முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்” இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment